Social Icons

Pages

Tuesday, November 10, 2009

கலங்குகிறேன்.

பாலில்நீரைக்கலப்படம் செய்தகாபியை காலையில் அருந்திவிட்டுகலப்படம் பற்றிக் கவிதைஎழுதகணிணியைத்திறந்தால்கணிணிக்குள்ளேவைரஸின் கலப்படம் ’அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’என்று சொல்ல வரும்போது கண்கள் கலங்குகின்றன காரணம்.. காற்றில்வரும் தூசியிலும்கரியமலவாயுக்கலப்படம் சுவாசிக்கும் மூச்சிலும்சுற்றுபுறசூழலின்நச்சுப்புகைக்காற்றின் கலப்பு உயிரையே பலிவாங்கும் கலப்பட மருந்துகள் நோயைவிட மனித உடம்பைமேலும் பாதிக்கும் சிமெண்டில்...
மேலும் படிக்க... "கலங்குகிறேன்."

Tuesday, November 03, 2009

உள்ளம் கவர் இல்லம்!

”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர். ஒவ்வொருமனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது வீட்டை ஒவ்வொருக்கணமும் நேசிக்கும் மனிதர்கள்...
மேலும் படிக்க... "உள்ளம் கவர் இல்லம்!"

Monday, November 02, 2009

திக்குத் தெரியாத காட்டில்...

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோதுஇதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன்....
மேலும் படிக்க... "திக்குத் தெரியாத காட்டில்..."

Thursday, October 22, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)

(மு.கு. முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்!) 1989 ஜனவரி, 7. “கவுண்டரய்யா உங்க மகன் ராசு. ரண்டு வயசுக் கொளந்தப் பையனாட்டமா இருக்கான்? அராமித் தனம் பொறுக்க முடிலீங்கோ. நெம்ப லொள்ளுங்கோ. என்ர ஊட்டுக்குள்ள பூந்து ஆறு மாசப் பச்சக் கொளந்தைனுங்கூடப் பாக்காம அருக்காணிப்...
மேலும் படிக்க... "நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)"

Tuesday, October 20, 2009

உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)

”புது பைக்கு ! புது ட்ரஸ்ஸு !புது ஆபீசு! கலக்கற நந்து!”பாலீஷில் பளபளத்த ஷூவிற்குள் தன் பாதங்களை நுழைத்துக்கொண்டிருந்த நந்தகுமார் ,தங்கையின் கிண்டலான பேச்சை ரசித்தபடி,”தாங்க்ஸ் நித்யா “ என்றான்.முதல் நாள் அலுவலகம் போகிற டென்ஷனில் அவனுடையமுகம் அந்த ஃபான்காற்றிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.வாசலுக்குசென்று பைக்கினைஆரோகணித்து அமரும்போது உள்ளிருந்து அவன் அம்மா ஓடிவந்தாள். வரும்போதே கையில் இருந்த சின்னகாகிதப்பொட்டலத்தைபிரித்தபடி...
மேலும் படிக்க... "உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)"

Monday, October 19, 2009

பிரியமழை!

கொட்டு மழைமிகுதியில்கரையுடைத்துக்கொள்ளும்காட்டாற்றினாய் மாறாமல்ஆழ்ந்து சூழ்ந்து தனக்குள்ளேபெருகிப்படர்ந்துவிளிம்புவரை ததும்பிநிற்கும் கேணி நீராய்என்னுள்பொங்குகிறது உன்மீதான என் பிரியங்கள்உன்னைத்திணறவைக்கும்உத்தேசமின்றிஅவைகள்என்னுள்பத்திரப்படுத்தப்பட்டுள்ளது அன்பென்பது ஆதிக்கம் செலுத்த அல்லஎன்பதைபுரிந்துகொண்டிருப்பதால்மதிக்கின்றேன்,ஆரவாரமில்லாத உன் பிரியமழையையும்அமைதியை அடக்கியஉன் புன்னகையையு...
மேலும் படிக்க... "பிரியமழை!"

Saturday, October 17, 2009

தீபாவளிக்குதூகலங்கள்!

அன்று.....-- ஒருவாரம் முன்பேஅம்மாதயாரித்துவிடும்மிக்சரும் மைசூர்ப்பாகும்பாதுஷாவும் பாதாம் அல்வாவும்இன்னும் சிலபலகாரங்களையும் எங்கள்பார்வையில்படக்கூடாது என்றுதூக்கிலிட்டுமறைத்துவிடுவாள்சந்தோஷப்பூரணத்தைஉள்ளேவைத்திருக்கும்சோமாசிப்பலகாரம்முரசடித்து தன் இடத்தை அறிவிக்கதம்பிகளுடன் சேர்ந்துதூக்கு வைத்த இடத்தைமோப்பம் பிடித்துபாதிதூக்கைக்காலிசெய்துவிடுவோம்’இறைவனுக்குப்படைக்குமுன்பேஎதற்கு எடுத்தீர்கள்?’என்று அம்மாகேட்கும்போது’குழந்தையும்...
மேலும் படிக்க... "தீபாவளிக்குதூகலங்கள்!"

Tuesday, September 15, 2009

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக.

இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம் எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்ஒன்றினோடொன்று மாறுபற்றிடும் உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும் வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர் இதயங்களில் இன்றும் இருப்பவர்!மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர் மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்கனவு...
மேலும் படிக்க... "அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக."

Monday, August 24, 2009

2050 லவ்ஸ்டோரி!

அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி. “என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள...
மேலும் படிக்க... "2050 லவ்ஸ்டோரி!"

Wednesday, August 19, 2009

GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!

கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு! நவரத்தினங்களில் இந்த மாணிக்கம் என்கிற கல்லுக்கு ரொம்பவே மதிப்பு! Ruby இதுக்கு ஆங்கிலத்துலபேரு. மாணிக்கத்திலும்...
மேலும் படிக்க... "GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!"

Monday, August 17, 2009

முள்ளும் மலரும்

மறுக்கமுடியாதுமுள்ளைமுள்ளால்தான்எடுக்கமுடியும் என்பதை. நியாயம் பேசும் துலாபாரத்தில் நிமிடம் காட்டு.ம்கடிகாரத்தில். பூக்களின் சாம்ராஜ்யத்தில்முள்கூடமுடிவெடுக்கிறது! பாதுகாப்பிற்குமுள்வேலி பூக்களைப்போலமுட்களை நாம் நேசிப்பதில்லைஇதனாலோ என்னவோபாதைமுள்ளாய் வந்துபாதத்தைப்பதம்பார்க்கிறது! கண்மீன்களில்தெரியும் பார்வைமுள் முட்கள் பூக்களைப்போல்வாடுவதில்லை...
மேலும் படிக்க... "முள்ளும் மலரும்"

Thursday, August 13, 2009

மணற்கேணி2009.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும்மாபெரும் கருத்தாய்வுப்போட்டிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா?ஆகஸ்ட் 15 படைப்புகளை அனுப்ப கடைசிநாள்!பிரிவு3 இலக்கியம் எனும் வரிசையில்,தமிழர் இசை எனும் தலைப்பில் நான் அனுப்பி இருக்கிறேன்..பதிவினை போட்டி முடிவு வரும் வரை வெளியிடக்கூடாது என்பதால் இங்கு பதியவில்லை.தமிழ் அன்பர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்!வெற்றிக்கு வாழ்த்துகள்!நாம் யாராவது வென்றால் சிங்கப்பூரில் ச...
மேலும் படிக்க... "மணற்கேணி2009."

Wednesday, August 05, 2009

ஆயிரம் நட்சத்திர விருந்து!

பட்டு மெத்தை வேண்டாம் அம்மாவின்இடுப்பே போதும் மயிலிறகுவேண்டாம்மடியிலிட்டுவிரலில் வருடினாலேபோதும் அம்மாவின்உள்ளங்கைதொட்ட சுகம் வேறெதிலும் கிட்டாது கண்ணுக்குத்தெரியாத கருணை உணர்வை கன்றான தன் மகவிற்கு கனிவுடன் தருவாள் வாய் நனைத்து மட்டுமல்லவயிற்றையும் நிறைத்துவிடுவாள்எந்த ஐந்துநட்சத்திர ஓட்டலில்இந்த ஆயிரம் நட்சத்திரவிருந்து கிடைக்கும்? இயற்கையின்...
மேலும் படிக்க... "ஆயிரம் நட்சத்திர விருந்து!"

Monday, August 03, 2009

காவிரிப்பெண்ணே வாழ்க!

நீரின்றி அமையாது உலகு! பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்! ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18...
மேலும் படிக்க... "காவிரிப்பெண்ணே வாழ்க!"

Saturday, July 25, 2009

கனாக்கண்டேன் தோழீ நான்!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி (ஆண்டாள்-நாச்சியார் திருமொழி.) வாரணம் என்றால்யானை பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்., பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது நாரணநம்பி ( சிறந்த...
மேலும் படிக்க... "கனாக்கண்டேன் தோழீ நான்!"

Sunday, July 19, 2009

கம்பனும், கீட்சும்!

இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும் தமிழில்கம்பனும் நம்மில் பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. சொல் ஓவியம்! பார்த்தீர்களா. சொல்சிற்பம் என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது!...
மேலும் படிக்க... "கம்பனும், கீட்சும்!"

Thursday, July 09, 2009

அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!

முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.மு.கு 2....ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (ஜூலை3ம்தேதி இடவேண்டிய பதிவு இது,,சிலகாரணங்களினால்தாமதமாகிவிட்டது)முகு3..தவறாம பின்குறிப்பு படிங்க!**********************************************************************நிறையப்பேசின...
மேலும் படிக்க... "அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!"

Wednesday, June 24, 2009

J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)

J.ஜனனிD/O K.ஜகதீசன்(சிறுகதை .உரையாடல் போட்டிக்கு)***************************” ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா , நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?"' மாலைத்தென்றல் ’ மெல்லிசைக்குழுவின் இசைஅமைப்பாளர் ரங்கப்ரசாத இப்படிக்கேட்கவும்,’ ஒருநிமிஷம்!’ என மைக்கின் முன்பாக விரல்களைமூடியபடி சன்னமான குரலில் சொன்ன ஜனனி,மேடை ஓரமாய் நகர்ந்தாள்.அங்கிருந்த...
மேலும் படிக்க... "J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)"

Thursday, June 18, 2009

வார்த்தை!(கவிதை)

வாளாகும்,வருடும் மயிலிறகாகும்.யாழையும்குழலையும்ஓரங்கட்டிவிடும்மழலையின்சொல்லாகும்.இதன் வழிகள் மூன்று.கனியும்; காதலாகிக்கசியும்;கடிந்தும்மிரட்டும்என சிறுவாசல்கொண்டவிழிவழிமுதல்வழி.தொலைவிலிருந்தாலும்குரல் அடையாளம்காட்டும்உணர்வுக்கு ஏற்றபடிஒலிவடிவத்தைமாற்றித்தரும்சாமரமும் வீசும் சாட்டையாய் அடிக்கவும் செய்யும்நாவின் துணையோடுவரும்இதழ்வழி,இதன் இரண்டாம் வழிமுதலிரண்டையும் முட்டாளாக்கிவிடும்முழுமையான உணர்வுகளைமுக்கியமாய் தெரிவிக்கும்தொடுகைவழி...
மேலும் படிக்க... "வார்த்தை!(கவிதை)"

Monday, June 08, 2009

கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)

மரங்களிலே விலை உயர்ந்த மரம் எதுன்னா சந்தனமரம்தான் (என்பதை மறைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் புராணமே நமக்குச்சொல்லிடும்!) இந்தியா-குறிப்பா காவிரி உற்பத்தியாகும் கர்னாடகாதான் இதுக்கு- தாய்வீடு.அடுத்து தமிழ்நாடு. உலக்த்திலேயே இந்தியா இலங்கை பிலிஃபைன்ஸ் என மூணு நாடுகளில்தான் சந்தனமரங்கள் வளர்கின்றன.உயிரோட இருக்கிறவரை பார்க்கவும்...
மேலும் படிக்க... "கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)"

Monday, June 01, 2009

உலகின் முதல் வசந்தம்!

''உலகின் மீது கடவுள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் வற்றவில்லை என்பதன் அடையாளம்தான் பூக்களும் குழந்தைகளும் ' ' என்கிறார் தாகூர். நீ அசைந்தாய்நானும்புதிதாகப்பிறந்தேன்அப்பாவாக! என்கிற கவிஞர்தமிழ்முருகனின் பரவசம் எல்லா பெற்றோர்களுக்கும் உரியது. செடிகளைப்போல அன்றாடம் பூத்துவிடுகிற மலர்ச்சியுடன் அலைகிற வித்தை குழந்தைகளுக்கே...
மேலும் படிக்க... "உலகின் முதல் வசந்தம்!"

Friday, May 15, 2009

ரியாத் கவியரங்கமேடையில் வாசிக்கப்பட்டகவிதை

நட்பு. (இந்த தலைப்பில் நான் எழுதிய கவிதையை ரியாத் கவியரங்கமேடையில் வாசித்தவருக்கு நன்றி. எழுதவைத்த சகோதரர் ஷாஜகானுக்கு மிக்க நன்றி)தமிழ்வாழ்த்து.பிறந்ததும் செவியில் விழுந்தது தமிழ்வளர்ந்ததும் இன்னும் வளர்ப்பதும் தமிழ்தமிழென்பது ஒரு சர்க்கரைக்கடல்அமிழ்ந்து குளித்துமுத்தெடுக்கமுத்தெடுக்கவிழுந்துவிடுவதில்லை தமிழ் நம்மைவீழ்த்தியும் விடுவதில்லைஉலகெங்கும் ஒலிக்கும் தமிழுக்குதலை சாய்த்து வணக்கம் சொல்வேன்அவை வாழ்த்துபல்வேறுபடிப்பினராய்பண்பட்ட...
மேலும் படிக்க... "ரியாத் கவியரங்கமேடையில் வாசிக்கப்பட்டகவிதை"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.