சுதந்திர வேள்வியில் நெருப்பாய் எழுந்தவர் நீலகண்ட பிரும்மச்சாரி. அவரைச்சிறையிலடைத்தனர் விடுதலை ஆகிவெளியே வந்தவரின் உடலில் சிறைத்தழும்புகளையும் மீறி வறுமைத் தழும்புகள் தெரிந்தன. எம் அன்னையின் கைவிலங்குகள் என்றைக்கு உடையும் என்று கொதித்தவர் தன்னை வதைத்த வறுமையை எண்ணி வேதனையுற்றார். மகாகவியின் மனம்கவர் தோழரான நீலகண்ட பிரும்மச்சாரிக்கு நிலைகெட்ட மனிதர்களை நினைக்கும்போதே நெஞ்சுகொதித்தது. அவரின் பொது உடமை நெஞ்சம் எழுத்துகக்ளில்...
Saturday, December 11, 2010
Sunday, November 21, 2010
திருக்கார்த்திகை மாதம்!
தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதம்! பன்னிரண்டு தமிழ் மாதங்களிலேயே கார்த்திகைக்கு மட்டுமே திருக்கார்த்திகை என்று பெயர் உண்டு. ஆதியிலிருந்தே மனிதன் அக்னியை தெய்வமாகக் கொண்டாடி வந்தான். பெரும்பான்மையான பண்டிகைகளில் நாம் விளக்கேற்றி வைப்பது இந்த அடிப்படையில்தான். ஒளியானது குறிப்பிட்ட அளவுள்ள சலனத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியும். இவ்வுலகில் நாம் கண்ணால் காண முடியாத ஒளியும், காதால் கேட்க முடியாத ஒலியும் உள்ளது. ஆந்தை பூனை இவற்றுக்கு...
Friday, October 15, 2010
காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)

”எப்படிடா மச்சான் இப்படி ஒரு காரியம் செய்தே! சூப்பர்டா! நீ ஒரு ரோபோடிக் எஞ்சினீயர்னு தெரியும், அமெரிக்கால பஃபல்லொபல்கலைக் கழகத்துல ரோபோ டெக்னாலஜி படிச்சேன்னும் தெரியும் ஆனா இந்தியா வந்த உடனேயே இப்படி ஒரு அட்டகாசமான ரோபோவை தயாரிப்பேன்னு நினைக்கவே இல்லைடா பரத்! எல்லாம் எந்திரன் படம் பார்த்த பாதிப்பால தானே இப்படி ஒரு ரோபோ தயாரிச்சி வச்சிருக்கே?”...
Thursday, October 14, 2010
தசரா யானைகளின் அவஸ்தைகள்.

மைசூர் தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்புசவாரி' எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும். நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். 'பலராமா' என்ற யானையின் தலைமையில் மற்ற யானைகள் தசராவிற்கு ஒருவாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்துநிற்பது வழக்கம். பலராமா எனப்படும்...
Thursday, October 07, 2010
நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்.
ஒரு நவராத்திரி விழாவில் சதாவதானி செய்குதம்பி பாவலரை அவரது நண்பர் இட்டாபார்த்தசாரதி நாயுடு என்பவர் பாடும்படி கேட்டபோது “உருமகளை அயன் நாவில் உறைபவளைபொறை மகளை உலகுக்கெல்லாம்குருமகளை அன்பர் புகழ் குலமகளைமலர்மகளை குறைதீர் செல்வத்திருமகளின் மருமகளை நிலமகட்கும்கலைமகளை செவ்வி வாய்ந்தஒரு மகளை எனக்கருள வருமகளைபெருமகளை உன்னல் செய்வாய்!” என்று பாடலைப்பாடினார். இந்து தெய்வத்தை இதுபோன்று எதுகை மோனையுடன் பாடிய இஸ்லாமியப்பெரியவர் செய்குதம்பி...
Wednesday, September 15, 2010
இதயங்களில் இன்றும் இருப்பவர்!

இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம் எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்ஒன்றினோடொன்று மாறுபற்றிடும் உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும் வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர் இதயங்களில் இன்றும் இருப்பவர்!மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர் மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்கனவு...
Saturday, September 11, 2010
தாலாட்டு பாடாத பாரதி!

கனக்கும் செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தியம் வீற்றிருப்பான் பாரதி!உணவின்றி ஒருமனிதன் பசித்திருந்தாலும்கூட உலகினை அழிப்பதுதான் சரியென்று...
Thursday, September 09, 2010
மலர்போல மனம் வேண்டும்!
செப்டம்பர்1ம்தேதி குங்குமச்சிமிழ் நாவல் மலர்போல மனம் வேண்டும் !சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த புத்தகத்தின் விலை ஐந்துரூபாய்க்குள்தான்! நான் எழுதி இருப்பதால் உடனே வாங்கிப்படிக்கணும் என்ன?!(எப்படில்லாம் அதட்டி உருட்டி படிக்கவைக்கவேண்டி இருக்குப்பா?!இம்மாதம் கலைமகள் பெண்மணி மாத இதழ்களிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கு ! யாம் பெற்ற...
Saturday, September 04, 2010
வேருக்கு விழா!
ஆசிரியர்தினம் வருவதற்கு முன்பே சிறந்தஆசிரியர்களுக்கான விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார்பள்ளிகளுக்கு இணையாக 10மட்டும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் தேர்ச்சி சதவீததை சாதித்துள்ளார்கள்.ஆசிரியர்களை...
Tuesday, August 10, 2010
தத்து.(சிறுகதை)
தத்து..சிறுகதைமுகு!(ஆகஸ்ட் நம்தோழி மாத இதழில் இந்தசின்ன கதை வந்துள்ளது!(பின்குறிப்பும் பாருங்க!) அந்த தனியார் தொலைக்காட்சி நிலையத்திற்கு ரசிகாவுடன் போய் நாற்காலியில் உட்காருகிறேன்.. ரசிகா? என் குழந்தைதான் .ஒன்றேகால்வயது ஆகிறது. என்குழந்தை என்றேனே தவிர அதை நான் பெற்றேன் என்று சொல்லவரவில்லை..ஆமாம் தத்துக்குழந்தைதான்..முதலில் நான் பெற்ற மகன் நாலுவயதில் இருக்கிறான்.இரண்டாவதாக தத்து எடுத்து ஒரு அனாதைக்குழந்தையை வளர்ப்பதென...
Saturday, July 03, 2010
மங்களூர்விமானவிபத்தும், மனதில் உதித்தகதையும்.

மங்களூர்விமான விபத்தின் சோகம் இன்னமும் யார்மனதையும் விட்டு அகன்றிருக்காது. தீயில் கருகிய மொட்டுக்களும் மலர்களும் சருகுகளும் விட்டுச்சென்ற ஞாபக வாசனைபல நாட்களுக்கு நம்மிடம் சுழன்று கொண்டு இருக்கும்.எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகளோடு யாரையாரையெல்லாம் சந்திக்கப்போகிறோம் என்ற மனமகிழ்ச்சியோடு அவர்கள் அன்று புறப்பட்டார்களோ? சாலையில் ஒரு ரோஜாப்பூ...
Wednesday, May 05, 2010
தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் இதழான தென்றல் எனும் மாதப்பத்திரிகையில் இந்தமாதம் எனது நேர்காணல் வந்துள்ளது! இலங்கையின் வீரகேசரி இதழுக்குப்பிறகு ஒரு வெளிநாட்டுப்பத்திரிகையில் என் நேர்காணல் வருவது மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது!
http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=114&cid=2
இந்தச்சுட்டில இருக்கு...எதுக்கும்...
Monday, May 03, 2010
விண்ணைத்தாண்டி வந்தேனே!
மரத்தடி.காம் என்று ஒருகாலத்துல ஒரு மடலாடற்குழு இருந்தது.அதில் எத்தனை எத்தனைபேர் பறவைகளாய் கூவி மகிழ்ந்தோம் தெரியுமா? பலர் அதில் முகம்தெரியாதபறவைகள் ஆனால் மனச்சிறகை விரித்து எண்ணங்களைப்பரிமாறிக்கொண்டு இருக்கிறோம் ! அதெல்லாம் விண்ணைத்தாண்டிய சந்தோஷங்கள்! ஆசிப்ஜீ ஆசாத்ஜீ ம்ரவண்டு கணேஷ் மஞ்சூர்ராசா மதுமிதா நிர்மலா பிகே எஸ், உஷா துளசி ஐயப்பன் ஜீவ்ஸ்,ஹரிக்ருஷ்ணன், பால்ராஜன் கீதா, கேவி ராஜா, சக்திப்ரபா ஜெய்ஸ்ரீகோவிந்தராஜன்(யாரையும்...
Wednesday, April 28, 2010
த்ரிசக்திகுழுமம் நடத்தும் இனிய இரு விழாக்கள்!

மே மாசம் 2ஆம்தேதி ஞாயிறு மாலை த்ரிசக்திகுழுமம் பெரிய விழா நடத்த இருக்கிறார்கள்!
அதுல அவங்க மூணு புத்தகங்கள் அதாவது பத்திரிகைகள் வெளியிடப்போறாங்க. ரசனை என்கிற இலக்கிய மாத இதழ், கொலுசு என்கிற நாவல்மாதாமாதம், அப்புறம் த்ரிசக்தி ஜோதிடம் என்று.
a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYo1c9MatxwhRJwx4qmFXMLm4U116DOxaF85_Hz3Tt6Wuuq7kAx5q7KB7MxiolN1aTH-9ZEd04ngqdYHvJM5kAT4q1DOLOFyrThazTo2MmT4wfU_xb4iM8L2ZayxN1Mg_31cDH5g/s1600/Invitation++for+2nd+May+++function.jpg">
...
Friday, February 26, 2010
ஆத்தா ஒன் சீலதான்....

ஆத்தா ஒன் சீலைதான்காத்தாக அணைச்சிருக்குதறியிலே நெஞ்சது என் உசுருலே பிணைஞ்சிருக்கு. உதிரத்துல பாலூட்டிஉத்திரத்துல சீலைதூளிகட்டிஉள்ள என்னை படுக்கவச்சே.பத்துமாசம் வரையிலும்பாவிமவ நான் படுத்துறங்கிபகலிரவு நேரமெல்லாம்ஈரப் படுத்தினதைபன்னீரா தொடச்சதும்ஆத்தா உன் சீலையிலே, மாரியாத்தா திருவிளாவுலஆரியமாலா வேஷங் கட்டஅன்னிக்குப் பொருத்தமாச்சிஆத்தா...
Monday, February 22, 2010
தமிழ்க்கடல்!

ஆழி சூழ் உலகம்!********************************************மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பல்சொற்கள்(பெயர்கள்)மிகுந்தே இருக்கின்றன.அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக் கருத்தை உணர்த்துகின்றன.கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல்...
Sunday, February 14, 2010
”தேவதை”யைக் கண்டேன்!

மனம்கவரும் ஒரு மகளிர் இதழாக தேவதை , தமிழ்ப்பத்திரிகை உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது! வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் தகவல்களுடன் இணையதள படைப்பாளிகளைப்பற்றி வெளி உலகுக்கு அடையாளம்காட்டி அறிமுகப்படுத்தும் தேவதையின் பணி சிறப்பானது. ஏனென்றால் இணையம் பக்கம் அனைவராலும் வர இயல்வதில்லை. பத்திரிகையை மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம்...
Saturday, February 13, 2010
அழகாய் அவனே இருக்கின்றான்!
ஓர் அறிவிப்பு!
பாடல் குரல்பதிவிலும் வருகிறது!
காதலர்தின சிறப்புக்கவிதை!
***************************
அழகாய் அவனே இருக்கின்றான்
ஆதலால் மனதை அடைக்கின்றான்
ஆற்றுமணலில் அவன் நடந்துவந்தால்
ஊற்றுப்புனலாய் உள்ளம் பொங்கிடுமே!
அருவிவீழ்ச்சியில் தலைகொடுத்தே
அந்த அழகன் நிற்கும் கோலம்தான்
மருவித் துளைத்தென் மனத்துள்ளே
மயக்க அருவிதான் பொழிகின்றதே!
அங்காடித்தெரு...
Friday, February 05, 2010
அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!

இணையஎழுத்தாளர்களைப்பற்றிய கட்டுரை இம்மாதக்கலைமகள் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது. தொடர்ந்து இதில் பலரும் வர இருக்கிறார்கள்.
இப்போது உங்கள் பார்வைக்கு இங்கே அந்தக்கட்டுரை!
a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqqFpVORjNfv-VZXEw6YhijJTx_zlKN7oFfQNiuZQX_Iksp1gd9B6VkgalQQGMPyhMgmYinA7_P7ZXRt66dD44QXSnn1KdQG2YV5GtajKPmThBtGEMBgN2FuMP5q6u4wwAHMaXA/s1600-h/page2.jpg">
a...
Thursday, February 04, 2010
தமிழர் இசை!
/////கொஞ்சநாள்முன்னாடி மணற்கேணி அமைப்பும், சிங்கைபதிவர்கள் மற்றும் இணையதளமும் நடத்தின கருத்தாய்வுபோட்டிக்காக கஷ்டப்பட்டு இதை ஆராய்ந்து எழுதி அனுப்பினேன்.பரிசு கிடைச்சா சிங்கப்பூருக்கு அனுப்பறதா அறிவிப்பு கொடுத்திருந்தாங்க. உடனே .கனவுல முஸ்தபா போய் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன்! பெரிய சிங்கப்பூர் விசிறி வாங்கி ஹால் சுவரில் மாட்டி அழகுபார்த்தேன்! சிங்கை நண்பர்களைசந்தித்து மைசூர்பாக்கெல்லாம் கொடுத்தேன். கனவு நனவாகவே இல்லை! ஆமாம்,...
Saturday, January 30, 2010
தாமரைக்கன்னங்கள்!

பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும். தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள் நீர்நிலையில்மட்டுமே...
Thursday, January 14, 2010
மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)
வீமனப்போல் மிகுந்த பலம் பெற்றாலும்காமனைப்போலக் கவினுடலம் உற்றாலும்வில்விசயன் போலவே வெற்றியினைக்கொண்டாலும்கல்விச்சிறப்பினில் கம்பனைப்போலானாலும்குற்றமிலாச்செல்வம் குபேரன்போல் சேர்த்தாலும்எற்றைக்கும் இந்திரன்போல் ஏற்றமுற வாழ்ந்தாலும்நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்அஞ்சிக்கடல்போல் அடக்கமாய் வாழ்ந்திடுக.கற்றுயர்ந்த சான்றோரைக்கண்டு வணங்கிடுகம்ற்றன்னார் சொல்லை மதித்து நட்ந்திடுகஅன்புற்றடியவரை ஆண்டவனாய் எண்ணிடுகபின்புற்றவர்க்குப்...
Thursday, January 07, 2010
நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!
ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன். ”என்னது!...
Subscribe to:
Posts (Atom)