Social Icons

Pages

Sunday, November 30, 2008

ஏ, தீவிரவாதியே!

தீவிரவாதிக்கு ஒரு கவிதை.
****************************
மனிதகுலத்தில் பேதமுண்டா
மனத்தில் முள்தான் வளர்ந்திடுமா
இனிய உறவுகள்பல இருக்க
இதயம் நஞ்சாய்ப்போனதென்ன?

சண்டை வளர்க்கவிடலாமா
சதிகள் தீட்டப்படலாமா
மண்ணில்பல்லுயிர்மடிந்துவிழ
மனிதன்காரணமாகலாமா?

உலகம்பகைவர்கள்போர்க்களமா
உன்னையும் அதிலே பார்ப்பாயா
இளமை வலிமை இருப்பதனால்
இத்தனைப்பேரைக்கொல்வாயா?

எண்ணம் உயர்வாய் மாறாதா
எங்கும் அமைதி நிலவாதா
பண்ணும் பழிகள் மாறாதா
பாரில்தீவிரவாதம் தொலையாதா?

இன்னமும் இருளில் அழியாதே
இன்னல்புயலை அழையாதே
உன்னை உணரதயங்காதே
உலகில்தர்மம் அழவே நடக்காதே.

5 comments:

  1. ////எண்ணம் உயர்வாய் மாறாதா
    எங்கும் அமைதி நிலவாதா
    பண்ணும் பழிகள் மாறாதா
    பாரில்தீவிரவாதம் தொலையாதா?////

    நன்று சகோதரி.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரிகளும் அமைதிக்காக
    அமைதியை வேண்டி நிற்கின்றன.
    இவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியை இறைவன் அந்த தீவிரவாதிகளுக்கு தர வேண்டும். அவர்கள் மனம் மாற வேண்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    ReplyDelete
  3. Anonymous10:58 PM

    மும்பையில் அரங்கேறிய அந்த கொடுமையான சம்பவத்தை யாரும் மறக்க முடியாது.

    தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக வேண்டும். ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் இந்தியாவின் பாதுகாப்பை மறந்தது ஏன்? இதற்கெல்லாம் பதில் தேட வேண்டும்.

    ReplyDelete
  4. கருத்து தெரிவித்த சுப்பையாஅண்ணா ராமலஷ்மி ஆனந்த் அமிர்தவர்ஷிணி அம்மா அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.