Social Icons

Pages

Monday, November 03, 2008

மகிழ்ச்சிக்கு என்ன வழி?


ஒருவீட்டில் கதவு தட்டப்பட்டது.

இல்லத்தரசி வேகமா வந்து கதவைத்திறந்தாங்க. வெளியே மூணு பெரியவங்க நின்றுகொண்டு இருந்தாங்க.

"நீங்கள்ளாம் யாரு என்ன வேணும் உங்களுக்கு?"ன்னு அந்தம்மா கேட்டாங்க.

"அம்மா! என்பேரு செல்வம் இவர் பேரு ஆரோக்கியம் அடுத்தவர் பேரு அன்பு. நாங்க மூணு பேருமே உங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவங்க"

"ஓ அப்படியா உள்ளே வாங்க"

"அதுமுடியாத காரியம் எங்களில் யாராவது ஒருவரைத்தான் நீங்கள் விருந்தினராய் அழைக்கமுடியும். யாரை அழைக்கிறீர்கள்? சொல்லுங்கள்?"

அந்தம்மா யோசிச்சாங்க அப்புறம்,"கொஞ்சம் இருங்க வரேன்" என்று உள்ளேபோனாங்க.
கணவரிடமும் மகளிடமும் விவரம் சொன்னாங்க.

கணவர்,"ஆரோக்கியத்தைக்கூப்பிடேன்" என்றார்.

"இல்லங்க எனக்கு செல்வத்தை அழைக்கலாம்னு தோணுது"

அப்பாவும் அம்மாவும் இப்படிச்சொல்லவும் மகள்" அம்மா! அன்பைஅழைங்க" என்கிறாள்
வாசலுக்கு வந்தவங்க அன்பை உள்ளேவரச்சொல்றாங்க.

அன்பு மகிழ்ச்சியாய் உள்ளேகாலடி எடுத்துவைத்து வரவும் தொடர்ந்து மற்ற இருவரும் கூடவே வந்துட்டாங்க.

"என்ன இது இப்போது மூணுபேரும் வரீங்களே?' இல்லத்தரசி வியப்பாய் கேட்டாங்க.

"ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"


மகிழ்ச்சிக்கு வழி வேறெதுமில்லைங்க அது,அன்புவழி! ஆமாங்க அன்பின்வழிதான்னு இந்தக்கதை சொல்லாம நமக்கு சொல்லுது இல்லையா?


அதுசரி இந்தக்கதைக்கும் பாவ்னா படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாரோ கேட்கறீங்க!
அந்தமுகத்தைப்பார்த்தாலே பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))etc etc...):))
மகிழ்ச்சி என்பதாலும் அவங்க மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி என்பதாலும்தான்!:):)

19 comments:

  1. //அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும்//

    உண்மை.

    பதிவு அருமை.

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...
    //அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும்//

    உண்மை.

    பதிவு அருமை.

    >>>>நன்றி ராமலஷ்மி

    பளிச்சுனு பதில்போடுட்டீங்க ஸ்பெஷல் நன்றி ரீ!

    ReplyDelete
  3. நல்ல கதை.அன்பான கதை.
    நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பிக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஆகா...எம்புட்டு நாள் ஆச்சு அக்கா உங்க பக்கம் வந்து...!! ;)

    வழக்கம் போல பதிவு கலக்கல்..:)

    \\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
    (முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\

    ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண்டு படமாக போடுங்கள் பாவம் அடிச்சிக்க போறாங்க ! ;)

    ReplyDelete
  5. வல்லிசிம்ஹன் said...
    நல்ல கதை.அன்பான கதை.
    நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பிக்கும் வாழ்த்துகள்.

    12:07 AM
    >>.நன்றி வல்லிமா

    ReplyDelete
  6. கோபிநாத் said...
    ஆகா...எம்புட்டு நாள் ஆச்சு அக்கா உங்க பக்கம் வந்து...!! ;)

    வழக்கம் போல பதிவு கலக்கல்..:)

    \\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
    (முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\

    ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண்டு படமாக போடுங்கள் பாவம் அடிச்சிக்க போறாங்க ! ;)???

    கோபியக்காணலயேன்னு சொல்லிட்டே இருந்தேன் வந்துட்டீங்கதம்பி மகிழ்ச்சி

    இரண்டுதம்பிங்களும் அடிச்சிக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன் பெரியவர் விட்டுக்கொடுத்துடலாம் யார் கண்டா?:)

    ReplyDelete
  7. /ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"/

    அருமையான
    கருத்து

    ReplyDelete
  8. நட்சத்திரத்திற்கு 'அன்பான' வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  9. \\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
    (முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\


    ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்கு மைபா மைபா ன்னு மிரட்டி வைக்கறீங்க.. ம்ம்ஹூஉம் இதை தட்டி கேட்க நல்ல சுத்தியலோடு ஒரு ஆள் வேண்டும்.

    ReplyDelete
  10. திகழ்மிளிர் said...
    /ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"/

    அருமையான
    கருத்து

    7:11 AM

    >>நன்றி திகைமிளிர்

    ReplyDelete
  11. கவிநயா said...
    நட்சத்திரத்திற்கு 'அன்பான' வாழ்த்துகள் அக்கா.

    7:24 AM
    >>>அன்புக்கு நன்றி கவி

    ReplyDelete
  12. ஸ்வாதி said...
    \\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
    (முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\


    ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்கு மைபா மைபா ன்னு மிரட்டி வைக்கறீங்க.. ம்ம்ஹூஉம் இதை தட்டி கேட்க நல்ல சுத்தியலோடு ஒரு ஆள் வேண்டும்.

    8:44 AM
    >>>> வாங்க சுவாதி
    இங்கயும் ஆயுதமா ஆல்ரெடி மைபா இருக்கறப்போ?:):) அன்பான பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி தோழி

    ReplyDelete
  13. //பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))etc etc...):))//

    ஷை அக்கா,
    முதல்வர் ஓகே தான்..அவர் அங்கிள்..பாவனா ஆண்ட்டி ஓகே..!

    ஆனா நான்...?
    குழந்தைக்கெல்லாம் பாவனா ஆண்ட்டியைச் சேர்த்து கிசு கிசு பரப்புறீங்களே...இது தகுமா? இது அடுக்குமா ?

    ReplyDelete
  14. வல்லி அக்கா,

    //நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பிக்கும் வாழ்த்துகள்.//

    அவங்க ஏதோ சும்மா எழுதியிருக்காங்க..இதுக்கு வாழ்த்துக்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

    ReplyDelete
  15. கோபிநாத் அண்ணா,

    //ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண்டு படமாக போடுங்கள் பாவம் அடிச்சிக்க போறாங்க ! ;)//

    அதானே..நல்லாக் கேளுங்க..
    மகிழ்ச்சியா இருக்க வழியும் சொல்றாங்க..அடிச்சுக்கவும் வைக்கிறாங்க அக்கா :P

    ReplyDelete
  16. //ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்கு மைபா மைபா ன்னு மிரட்டி வைக்கறீங்க.. ம்ம்ஹூஉம் இதை தட்டி கேட்க நல்ல சுத்தியலோடு ஒரு ஆள் வேண்டும்.//

    நீங்களே போதும் ஸ்வாதி அக்கா..
    நல்லா 'தட்டிக்' கேளுங்கோ :)

    ReplyDelete
  17. எலே ரிசானு
    நீங்க எல்லாம் இங்க பேசிக்கிட்டு இருந்தீங்க!
    ஆனா அக்கா பதிவு+பாவனா போட்ட அடுத்த நிமிசம்,
    நான் பாவனா கூட ஹாலிடே போயிட்டூ இப்ப தான் வாரேன்! ஹிஹி! :))

    ReplyDelete
  18. azhagana karutthu,,, super

    ReplyDelete
  19. azhagana karutthu,,, super

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.